Me and My Pen

Monday, November 3, 2008

அவள் அப்படித்தான்

ஒரு நிறுவனத்தில் கணிபொறி பிரிவில் பணியாற்றி வந்தனர் மூவர் . வித்யா, சீதா, மற்றும் அர்ச்சனா. இதில் அர்ச்சனா, மிக அமைதியான பெண். மற்ற இருவரும் நன்கு அரட்டை அடிக்கும் ஆசாமிகள். இவர்கள் இங்கு சேர்ந்த பிறகே அறிமுகமானவர்கள். இவர்களின் வேலை நேரம் காலை எட்டு மணியிலிருந்து மாலை ஐந்து வரை .

வித்யா மற்றும் சீதா கல்லூரி விடுதியிலிருந்து படித்தவர்கள். மிக சகஜமாக அனைவரிடமும் பழகுவார்கள். அர்ச்சனா, வீட்டு கோழி. என்றுமே பெற்றோரின் நிழலிலேயே பொத்தி பொத்தி வளர்ந்தவள். தினமும் தன் வேலையை முடித்து அரசு அலுவலகம் போல், சரியாக, ஐந்து மணி ஆனவுடன் கிளம்பிவிடுவாள். ஆனால், மற்ற இருவரும் , மணிக்கு ஒரு முறை Tea-break , ஒரு மணி நேரம் Lunch-Break என்று கல்லூரி போல் ஜாலியாக பணி புரிய விரும்புவார்கள்.

இவர்கள் இருவரும் மெயில் செக் செய்வது, blogs படிப்பது, chat செய்வது, செய்தி தாள் வாசிப்பது, games விளையாடுவது என்று ஒரு கணினி கொண்டு என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அவ்வளவும் செய்வர். பின்பு அதை பற்றி break களில் discussions . எட்டு மணிக்கு கம்மியா இருவரும் அலுவலகத்தை விட்டு கிளம்பினதா, சரித்திரமே இல்ல. இவர்களின் வேலையில் எந்த வித குறையும் இல்லாததால், மேனேஜர் இடம் இவர்கள் மூவருக்கும் நல்ல பெயர் தான்.

வேலை பொழுது போக்கு போல் செய்தால், சுகமாக இருக்கும் என்று எப்பொழுதும் அர்ச்சனா வை சீண்டுவார். அந்த வாதத்தை வளர்த்தால், எங்கு நேரம் போய்விடுமோ என்று அஞ்சி அவள் வாக்கு வாதத்தை வளர்க்க விரும்பவில்லை.

வித்யா மற்றும் சீதா browse செய்யும் technical sites வேறுபட்டிருந்தாலும்,
இவர்கள் இருவரின் favourite blog "பெண்ணுக்குள் ஓர் உலகம்". மது என்பவளால் எழுதப்படுவது.

"வீடு, வேலை, சாப்பாடு, தூக்கம், தொலைக்காட்சி னு இல்லாம, எதாவுது hobby இருக்கவேண்டாமா, then only you will know about many things. " என்று, இவர்கள் இருவரும் அர்ச்சனா விற்கு நிறைய முறை advice செய்திருக்கிறார்கள். "மதுவின் blog யவுது படி... நல்ல கதைகள், கவிதைகள், னு அசத்தலா எழுதி இருக்கா. எவ்ளோ followers தெரியுமா அவளோட blog க்கு?. அவ்ளோ நல்ல இருக்குன்னு அர்த்தம். சும்மா ஒரு முறை படிச்சு பாரு.. பிடிகலன்ன, free விட்டுடு... அது தவிர, இன்னும் எவ்ளவோ பண்ண முடியும் free time ல. சரியான நேரத்துல வீட்டுக்கு போய், அம்மா கு சமையல் ல உதவி செஞ்சு, தம்பி க்கு படிப்பு சொல்லிகுடுக்றது மட்டும் இல்ல வாழ்கை. நீயா நெறைய கத்துக்கணும் எங்கள போல!" னு ஒரு நாள் பயங்கர advice. என்ன சொல்லி என்ன, எப்பவுமே அர்ச்சனா வின் பதில் ஒரு புன்னகை மட்டும் தான்.

அன்று, வீட்டுக்கு வந்தவுடன், வித்யா, சீதா சொன்னது ஞாபகத்திற்கு வந்தவளாய், முதல் வேலையாக மதுவின் blog இற்கு சென்றாள். archana.ramkumar@gmail.com user ID வைத்து login செய்தாள். நம்ம அர்ச்சனா தான், மது என்ற புனை பெயரில், "பெண்ணுக்குள் ஓர் உலகம்" என்கிற வலைபதிப்பை எழுதுபவள்.

அர்ச்சனா வின் தாயார், "என்னம்மா, இன்னிக்கு வந்தவுடன், கம்ப்யூட்டர் முன்னாடி??" அர்ச்சனா அதற்க்கு "திவ்யா வும் சீதாவும் இன்னிக்கி வாழ்க்கையில் எதாவுது செய்யணும் னு ரொம்ப அட்வைஸ் பண்ணினாங்க. அதை வெச்சி ஒரு கதை தோணித்து. அது தான் உடனே எழுதிடலாம்னு வந்தேன்."

தாயார்: "நீ தான் அந்த blog எழுதறேன்னு சொல்லலாம்ல அவங்க கிட்ட?"

அர்ச்சனா : "வேண்டாம் மா. அப்றோம் அவங்க கேள்விகள், discussions எல்லாத்துல நானும் பங்கேற்க வேண்டி இருக்கும். அப்றோம் எழுதறது கொறஞ்சி அதை பத்திய பேச்சு அதிகமாகிவிடும். அது மட்டும் இல்லாமல், இப்படி எழுதினால், அவங்க நம்ள பத்தி என்ன நினைப்பாங்களோ, அப்படி எழுதினால், நானும் அப்படி தான்னு நினைபான்களோ, அப்படி பட்ட எண்ணங்கள் என் எழுத்து சுதந்திரத்தையே பரிச்சிடும். I have to write for others, if it is my profession. But writing is my hobby and I want to write it for me. நா எழுதறேன்னு சொல்லாமலே, விமர்சனங்கள் கேடசிடுது. இது போதுமே எனக்கு. அதுக்கு தான், என் நெருங்கிய நண்பர்களிடம், நான் படிச்சது னு சொல்லி என் blog post a நானே forward பண்ணினேன். இப்போ அதைபத்தி என் கூட வேலை செய்றவங்க எனக்கே சொல்றாங்க.

தாயார்: எல்லாத்துக்கும் எதாவுது பதில் வெச்சிருபியே!.

என்று தன் வேலையை கவனிக்க சென்றுவிட்டாள்.

3 comments:

Anonymous said...

Ennada rombha naal aache blog update panninnu was waiting for....was worth a wait...rombha nalla erukku !!

Anonymous said...

Super pa!!

SuryaRaj said...

Hey Radhika! super kadhai....oru typical female story writer rangela borithi!!! arumai