Me and My Pen

Tuesday, May 6, 2008

இதற்க்கு பெயர் தான் காதலா!

பார்வதி என்பவர் "பார்வதி இல்லம்" தனில் வாழ்ந்து வரும் ஒரு நடுத்தர வயது பெண்மணி. வயது மட்டும் இல்லை, பொருளாதர நிலையிலும் நடுத்தர வர்கமே. இவருக்கு வயது ஒரு நாற்பது இருக்கும். "பார்வதி காபி கொண்டு வா" ஆம் இது அவரின் கணவர் லிங்கம். "இதோ வந்துட்டேன்.. சாக்கர் கூட இல்லாத காபிய எப்படி தான் குடிகிரீன்களோ !!" என்று சொல்லிக்கொண்டே கொண்டு வந்து கொடுத்தார் பார்வதி.

"உப்பு கம்மியா காரம் கம்மியா செய்வியே ஒரு சாம்பார், அதுக்கு இது பரவாயில்லடி" என்று நக்கலோடு எதிர் வாதமிட்டார் லிங்கம். Sugar, BP னு வகை வகையான வியாதிகள் லிங்க திடம் உள்ளன... அவர் எந்த எந்த நேரத்தில், என்ன செய்யவேண்டும், என்ன சாப்பிட வேண்டும் னு பார்த்து பார்த்து செய்யறது பார்வதியின் முக்கிய வேலை.. சமையல், வீடு சுத்தம் செய்வதெல்லாம் கூட பிறகு தான். காலையில் ஆறு மணிக்கு அவரை எழுப்பி, வாக்கிங் போக சொல்லி, வந்தவுடன் காபி, குளியல், டிபன் என்று பார்த்து பார்த்து செய்யும் பார்வதி கு என்றும் லிங்கத்திடம் இருந்து திட்டு மட்டும் தான். உன் சமையல் ல இது இல்லை, அது இல்லை னு...

"வெளியில் சென்று சாப்பிட வீட்டில் full தடா" என்று நண்பரிடம் போலம்பினால் கூட, அதை மீற என்றுமே நினைத்ததில்லை நம்ம லிங்கம்.

குழந்தைகளை பற்றி இன்னும் ஒன்றுமே சொல்லவில்லையே என்று நீங்கள் என்னும் முன், பார்வதி கு ஒரு குழந்தை, பெயர் லிங்கம், வயது 46. லிங்கத்திற்கு ஒரு குழந்தை, பெயர் பார்வதி, வயது 40. இவர்கள் இருவருக்கும் இவர்கள் மட்டுமே குழந்தைகள்.. அதனால் தான் என்னவோ, தன் முழு அன்பையும், கவனத்தையும் லிங்கத்திடம் மட்டுமே செலுத்தி வந்தார் பார்வதி.

அழகாக சென்று வந்த அவர்களின் அமைதியான வாழ்க்கையை , ஒரு போன் நிலைகுலைய வைத்தது.. லிங்கத்தின் ஆபீஸ் லிருந்து வந்த போன் தான் அது. தீடீரென்று லிங்கத்திற்கு மாரடைப்பு வந்ததாகவும், மருத்துவமனை அழைத்து சென்றிருபதாகவும் தகவல். ஒரு நிமிடம் பார்வதியின் சப்த நாடியும் நின்றுவிட்டது.

மருத்துவ மனைக்கு விரைந்தோடிய பார்வதியின் மனதில் 1000 இற்கும் மேலான குழபங்கள். பணத்திற்கு என்ன ஏற்பாடு செய்வது, பேங்க் இப்போ ஓப்பன் ஆயருகுமா, பக்கத்து வீடு சுபத்ரா விடம் கொஞ்சம் கேட்பதா, என்று ஏக பட்ட கேள்விகள். கருமாரியம்மன் கோயிலுக்கு கரகம் எடுக்கணும், ஹனுமார் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்யணும் னு பல வேண்டுதல்கள்... லிங்கதிற்கு ஒன்றும் ஆகாது என்று அவர் உள் மனசு ஆழமாக சொல்லியிருக்கும் போல, அவர் கண்களில் நீர் வர மறுத்தது... இரண்டு மணி நேரங்களுக்கு பிறகு, "எதோ Angeo plast செய்யனுமம்.. 50,000 செலவாகுமாம்... செஞ்சதுக்கு அப்புறம் திருப்பியும் test எடுபான்களாம். சரி ஆகலைன ஆபரேஷன் பண்ணனுமாம்" என்று சுபத்ரா விடம் சொல்லிகொண்டிருந்தார் பார்வதி...

Angeo Plast இற்கு தேவையான பணத்தை, பேங்க், RD, முதலியவை வைத்து சமாளித்து விட்டார். 2 வாரங்கள் ஆகின Angeo plast schedule செய்து முடிபதற்கு. மருத்துவர் Operation செய்தாகவேண்டும் என்று கூறியதும், சோகத்தில் ஆழ்ந்தார் பார்வதி. "ஒரு லட்சம் தானே, என் பையன லோன் போட்டு தர சொல்றேன். பகவான் கண்டிப்பா உன்ன கை விட மாட்டார் " என்று ஆறுதல் கூறினாள் சுபத்ரா. மனம் நொந்த பார்வதியின் ஒரே நம்பிக்கை கடவுள் தான். வேண்டுதலின் எண்ணிக்கை அதிகரித்து.. 1 வாரத்தில் operation schedule செய்திருந்தார்கள்.
இந்த 3 வாரங்களாக பார்வதி லிங்கத்தின் அருகில், இல்லைஎனில் கோயிலில் சிவ லிங்கத்தின் அருகில் மட்டுமே இருந்தார்.
இன்று operation நாள். இன்றும் ஒரு வித தைரியத்தில் தான் இருந்தார் பார்வதி. இரண்டு மணி நேரத்தில் ஆபரேஷன். Operation theatre அருகில், டாக்டர்ஸ், நர்ஸ், என்று இங்கும் அங்கும் போய் கொண்டிருந்தனர். கடவுளே சரணாகதி என்று ஒரு ஓரமாக அமர்ந்திருந்தார் பார்வதி.

இரண்டு மணி நேரத்தில் முடிய வேண்டிய Operation, 3 மணி நேரம் ஆகியும் முடியவில்லை. அந்த ஒவொரு வினாடியும் பார்வதி தன் கணவனின் உயிரை காப்பாற்ற தனக்கு மிஞ்சிய பிரார்த்தனைகளை செய்து வந்தாள். Theatre கதவு திறந்தது. Operation success ஆனா மகிழ்ச்சியில் பார்வதியிடம் வந்த மருத்துவர் அதிர்ச்சியில் நின்றுவிட்டார். எமன் அன்று அங்கு வரவேண்டும் என்று எழுதி இருக்கிறது போலும். அதை மாற்ற யாரால் முடியும். மாரடைபினால் பார்வதி தன் உடலை அங்கேயே விட்டு பிரிந்திருந்தாள்!

தன் வயதாலும், மனசாலும் தாங்க முடியாத அளவு வருத்தத்தையும், மன உடைச்சளையும், பயத்தையும் தனக்குள்ளேயே தாங்க முயன்ற பார்வதியின் இதயம் அதை தாங்க மறுத்துவிட்டது. "sudden severe heart attack" என்று மருத்துவர் லிங்கத்திடம் எப்படி சொல்வது என தடுமாறி, முடிந்த வரை மறைத்து, இறுதியில் சொல்லிவிட்டார். பார்வதிக்கு இந்த நேரத்தில், தைரியம், ஆறுதல் கொடுக்க யாருமில்லையே என்று முதல் முதலாய், தனக்கொரு பிள்ளை இல்லை என வருந்தினார் லிங்கம்.

இனி என் செய்வது என்ற பயம், தனிமையின் மன உடைசல், பார்வதி பிரிந்த வருத்தம் இவை எல்லாம் தன்னை சூழ்ந்த நிலையில், பார்வதி அனுபவித்த அனைத்தையும் தானும் அனுபவிப்பதை உணர்ந்த லிங்கம், பார்வதி இடம் சிறிது காலத்திலேயே சென்று விடுவோம் என்ற சந்தோஷத்தோடு, புன்னைகைத்தார். "என்ன எப்போ டிச்ச்சர்ஜ் பனுவீங்க" னு மருத்துவரிடம் கேட்டார்.

No comments: