World is Enough

Me and My Pen

Wednesday, January 7, 2015


புற்று நோய் கிறுமியே,

உனக்குத்தான் மிகவும் கல்நெஞ்சம்...,
ஒன்றும் அறியாத பிறந்த குழந்தை இதமுரும் அன்னையின் மார்பகதிர்க்குள் எப்படி உன்னால் வரமுடிகிறது !


Tuesday, April 14, 2009

Golden memories

School days r most memorable and enjoyable period in everyone of our lives... though we wud have fussed a lot during those childhood days about exams, studies, school, teachers, princi etc., now when we recollect all of them, we feel elited and cherished... 

When we were kids, we wud have thot, we had lot of things to do, school, class work, notes, home work, assignments, tuitions and above all exams every quarter, answer papers... they gave us home work and assignments even in holidays...haa! bt deep inside the heart, all of us wud have enjoyed doing each and every thing.. without which, we wud have felt the whole life boring... 

As a child, we dont want a stable, stagnant life.. Life has to have all these thrills for us to be enthusiastic.. 

Just recollecting those days, the small small achievements ( it might even sound very simple to others), but for that age, they surely are achievements.. Even taking away the concession for age, I wud say, they are achievements,. Because that is the age, we wud have been fearless.. I feel, atleast in my case, my fear increased proportional to my age... As I grew, I am expected to be more responsible and well organized... This increased the pressure on me, which made me less confident in doing any task...

I cannot believe now.. I participated in light music competition till my VIIIth grade... how stupid I was to do so.. Today, I dont even sing chumma before a lot of 10 people...  bt this shows my courage to get to stage though I am a bad singer... 

Was having a groupchat discussion with my school friends.. All of us talked abt our school times, the silly things we did.. we r discussing it for more than a month now (touch wood)... it gives a fresh feel, brings back the confidence I lost in my school... Just churning those memories every now and then, it reflected into this post..

Dont ask me, where I am heading.. jus thot I will scribble something to keep my blog alive... thts it...

Monday, April 6, 2009

மாணிக்கம் B.A.



இது ஒரு சராசரி நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மனிதனின் கதை. மாணிக்கம் நம் கதையின் கதாநாயகன்.
மாணிக்கம் கொஞ்சம் முன்கோபக்காரன். இதனாலேயே எந்த ஒரு வேலையிலும் இரண்டு மாசத்துக்கு மேல் தாக்குபிடித்ததில்லை. மேல் அதிகாரியை கண்டபடி பேசிட்டான், கூட வேலை செய்ரவங்க கிட்ட மனஸ்தாபம், கீழ வேலை செய்றவங்க கிட்ட பல கட்டுபாடு என்று பல விதமான குற்றசாட்டு இவன் மீது. வேலை என்ன பிரமாதம், இவன் Interview வைத் தாக்குபிடிப்பதே பெரிய விஷயம். இப்போதெல்லாம் pressure interview னு வேற சில பேரு நம்ம பொறுமைய சோதிக்கிறாங்க.. இது தெரியாம மாணிக்கம் கத்திட்டு வந்துடுவான். இவன் ஒரு Disciplinarian, perfectionist அப்படி இப்படி எல்லாம் கிடையாது... சட்டுனு எதுக்கெடுத்தாலும் கோபம் வந்துடும், அவ்ளோதான். இப்போதெல்லாம் ரொம்ப பரவாயில்லைங்க. கொஞ்சம் control பண்ண ஆரம்சிருக்கான். ஆனாலும் மனசலளவுல பிறருக்கு தீங்கு பெருசா எதுவும் நினைக்காத சாதாரண மனுஷன்.  

வேலை இல்லாத பட்டதாரிக்கு என்னவெல்லாம் மரியாதை கிடைக்குமோ அதை விட பல மடங்கு மாணிக்கத்தை கவனித்து கொண்டார்கள் அவன் வீட்டில். இதற்காகவே எப்படியாவது எதாவது ஒரு வேலையை தேடி பிடிக்கவேண்டும் என்ற கட்டாயதில் இருந்தான் மாணிக்கம். அவனின் ஒரே ஆறுதல் அவனின் நண்பர்கள். watchman வேலையிலிருந்து Clerk வேலை வரை வித விதமான வேலைகளில் இவர்கள் உதவியால் பல பல Interviews attend செய்து, சில சில வேலைகள் கிடைத்து, மிகச் சில சில மாதங்கள் பணியாற்றியிருக்கிறான் இவன்.

"டேய், நாளைக்கு அந்த primary school princi ய பாக்க போரயில?? " நண்பன் ஒருவன் மாணிக்கத்தை பார்த்து கேட்டான். "போகாம எப்படி? என் தல விதி.. போய்த்தான ஆகணும் .. அந்த ஆளு எப்படி?? " இது நீங்கள் நினைத்த படி, மாணிக்கம் தான். 
"உனக்கு நேர் மார். பொறுமையின் சிகரம். அதுவும் நீ போகப்போறது சின்ன புள்ளைங்க வகுப்புக்கு. கொஞ்சம் பவ்யமாவே பேசு. எப்படியோ வேலைய வாங்கிடு... அப்றோம் சின்ன புள்ளைங்க தான, மெரட்டி வெச்சிடு.. உன்னப் பாத்து பயபடுவாங்க... அபடியே ஓட்டிடலாம்.." என்றான் நண்பன்..


மறுநாள் Interview. போன இடத்தில், "குழந்தைங்க கிட்ட எப்படி நடந்துப்பீங்க ?" னு கேட்டதுக்கு, மாணிக்கம், பொறுமையாக இருப்பவன் போல் காண்பிக்க முயன்றான். மேலும் இவன் ஒரு வேலையிலும் தொடர்ந்து மூன்று மாதங்கள் கூட வேலை செய்ததில்லை. அனுபவம் மிக்க, பள்ளி முதல்வரை ஏமாற்றமுடியுமா என்ன? இந்த வேலையும் கிடைக்கவில்லை.  

மாணிக்கம்:--- நான் ரொம்ப பொறுமையா "குழந்தைகள் எதையும் தெரிஞ்சு செய்யறதில்லை. நான்கு வார்த்தை திட்டி திருத்துவதை விட, அன்பாகச் சொல்லித்திருத்துவேன் " னு நீ சொல்லிக் கொடுத்தத தாண்ட சொன்னேன்... மத்த கேள்விகளுக்கும் அன்பு, பொறுமை, அரவணைப்பு னு நல்ல நல்ல வார்த்தைகளா தான்டா சொன்னேன்... வயசாயிட்டாலே , நம்ம மாதிரி பசங்களக் கண்டா நம்பிக்க வர்ரதில்லை இந்த பெருசுங்களுக்கு !!  

நண்பன்:--- நீ சொல்ற விதத்துலேயே தெரிஞ்சிடும் டோய்!. சண்டைக்குப் போறவன் மாதிரி போய் சமாதனம் பேசி இருப்ப.. இதக்கூட கண்டுபிடிகாட்டி அவரு principal லா எப்படி இருக்க முடியும்... !! 

அவனின் அப்பாவிடமிருந்து எதிர்பார்த்ததை விட அதிகமாகவே அர்ச்சனை. மாணிக்கத்திற்கு கல்யாண வயசுல அக்கா, காலேஜ் படிசிட்டிருகிற தம்பி, ஹப்பா னு நிம்மதியா வொக்காற வேண்டிய வயசுல, பத்து மயிலு cycle மிதிச்சு வீடு வீடா, கொடம் கொடமா தண்ணி கொண்டு குடுக்கிற அப்பா.. கேக்கணுமா!..  

"எவ்ளோ தான் திட்டினாலும், பாவம் டா உங்க அப்பா.. இந்த வேகாத வெயில்ல, அவரு cycle ல போறதப் பாத்தா எனக்கே கண்ணுல தண்ணி வரும் ... அந்த வேலையாவது நீ செய்ய கூடாதா" அதே நண்பன். 
"கேட்டேன் டா எங்க அப்பாகிட்ட. அவரு மொதலாளி, என்ன நம்பி தரமாட்டாராம் இந்த வேலைய.. " இது மாணிக்கம். 
"உண்மையான காரணம் அது இல்லடா, தன் புள்ள தன்ன மாதிரி கஷ்டப்படகூடா துனு அவரு நினைக்கிறார். நீ படிச்ச படிப்புக்கு ஒரு நல்ல வேலைல உன்ன பாக்கனும்னு அவரு ஆசை படறார்... இவ்ளோ திட்டினாலாவது, உனக்கு ரோஷம் வருமான்னு பாக்கிறார். . அப்பவும் நீ அவர திரும்பி திட்ட தான் செய்ற.. கொஞ்சம் பொறுமையா யோசிச்சு பாரு.. உனக்கே புரியும் " என்று நண்பன் அறிவுருத்தினான்.  

இரவு முழுக்க மாணிக்கத்திற்கு தூக்கம் இல்லை. 

என்ன தான் அவன் செய்வான்? , அவனையே அறியாம, கோவம், ஆத்தரம், எல்லாம் வந்து கத்திட்றான். இது ஒரு தப்பா? பயப்படறவன், அவன் பயத்தை போக்க நினைத்தால், விடா முயற்சி செய்து, தன் பயத்தை போக்கிடலாம். கோவம் வராதவனுக்கு கூட கோவம் வர வைத்துவிடலாம், ஆனால், பயப்படாதவனை பயப்பட வைப்பதும், கோவம் வருபவனைத் தடுப்பதும் ரொம்ப கஷ்டம்.. 

இரண்டு வாரமாய், யாரிடனும் சரியாக பேசவில்லை... தீவிரமாக வேலை கு application போட்டுகிட்ருந்தான். ஒரு supervisor வேலைக்கு ஆளு எடுப்பதா கேள்விப்பட்டு, அணுகினான். Supervisor ன, பெரிய படிப்பெல்லாம் படிசிருக்கவேண்டாமா என்ற சந்தேகம் அவனுள். அனால், தெளிவாக படிச்ச படிப்பு என்ன வென்றாலும் பரவைல்லைனு சொல்லிட்டாங்க. கீழ வேலை செய்றவங்க சரியாய் வேலை செய்றாங்களான்னு பார்த்தா போதுமாம்.  

Interview விற்கு சென்றான். இந்த முறை மிகவும் நிதானமாக இருந்தான். அவசரப்படாமல், வீட்டு நிலையை மனதில் வைத்துக்கொண்டு, மிக பொறுமையாக பதில் கூறினான். இந்த முறை, அவனை உசுப்பேத்தி விடுவது போல் கேள்விகள் இருந்தன.. pressure interview என்பதை புரிந்துக்கொண்டு, அவனும் நிதானமாக, ஒரு சாதுவைப்போல் பதில் கூறினான். அவனுக்கே அவனை மிகவும் பிடித்தது. அவசரம், ஆத்திரத்தில் இல்லாத தெளிவை இப்பொழுது அவனால் உணர முடிந்தது.... 

Interview முடிந்து வந்தவன், நண்பர்களிடம் "கண்டிப்பா இந்த முறை, நான் ரொம்ப வேற மாதிரி இருந்தேன் டா... 'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு' என்பது ரொம்ப சரி.... இன்னைக்கு தான் நான் முதல் முறைய புத்திசாலி மாதிரி பேசி இருக்கேன்" என்று தன்னை தானே மிகவும் புகழ்ந்தான்... 
Interview முடிந்த இடத்தில், முதலாளியிடம், Interview வின் போது இருந்த மற்றொரு அதிகாரி "அந்த மாணிக்கம் எல்லா கேள்விகளுக்கும் நல்லா தானே பதில் சொன்னார் .. ஏன் அவனை வேண்டாம்னு சொல்றீங்க??" னு கேட்டார். அதற்க்கு முதலாளி, " ஆமாம் யா, அவன் நல்லாத்தான் பேசினான்... இருந்தும், இந்த வேலைக்கு கொஞ்சம் துணிச்சலும், கீழ வேலை செய்றவங்க இவன் மேல கொஞ்சம் பயமும் வெச்சிருந்தாத்தான், நமக்கு வேலை நடக்கும்.. அதுக்குத்தானே, பெரிய படிப்பெதுவும் வேண்டாம், சின்ன வயசு பசங்களா பார்த்து Interview கு கூப்பிட்டது. இவனுக்கு இருக்கிற பொறுமைக்கு இவன் சின்ன புள்ளைங்களுக்கு பாடம் எடுக்க தான் லாயக்கு" என்றார். 
வேலை கிடைக்காவிட்டாலும், மாணிக்கம் கற்ற பாடம், அவனுக்கு கட்டாயமாக கைக்கொடுக்கும்.

Monday, January 12, 2009

பிறந்த நாள் பரிசு

என் பெயர் சுந்தர். நான் ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல வேலை செஞ்சிற்றுந்தேன். கவனிக்கவும், "செஞ்சிற்றுந்தேன்".. இப்போ வேலை தேடிற்றுகேன். எங்க கம்பெனி திடீர்னு ஒரு நாள் மூடிட்டாங்க. பெரிய படிப்பெல்லாம் படிச்சிருந்தா, வேற வேலை உடனே கெடச்சிருக்கும்.. நம்ம B.A. படிப்புக்கு இந்த காலத்துல, peon வேலை கூட யோசிச்சிட்டு தான் குடுப்பாங்க. ஏதோ எங்க அப்பா மேல வெச்சிருந்த மரியாதைல, பழைய company supervisor வேலை கெடச்சிது. வாழ்கையும் நல்லா ஓடிற்றுந்துது.

எனக்கு கல்யாணமாகி 3 வருஷங்கள் ஆய்டுச்சு. போனதே தெரியலங்க. ஒவ்வொரு நாளும் அழகு, அன்பு, ரசனை, மிக்கதாகவே இருந்தது எங்கள் வாழ்கை. மன்னிக்கவும், "இருக்கிறது" எங்கள் வாழ்கை. ரெண்டு நாள்ல, அவளின் பிறந்தநாள் வருது. ஒவொரு தடவையும், அவளுக்கு mega surprise குடுக்காம நான் இருந்ததில்ல. ஒரு வாரத்துக்கு முன்னாடியே plan பண்ணிடுவேன். இந்த முறை வேலை தேடும் tension, pressure ல இதுக்கெல்லாம் நேரம் ஒதுக்க முடியல. நேரமே இருந்தாலும், மனம் வேலையை தவிர வேற எதையும் யோசிக்க மறுக்குது.


கல்யாணமாகி முதல் பிறந்தநாளுக்கு ஒரு மோதிரம் குடுத்தேன். அதையும் ஒரு அமைதியான நதியின், நடுவே ஒரு cruise boat இல் அனைவருக்கும் முன்னமே அறிவித்துவிட்டு, அனைவரும் சேர்ந்து birthday பாடல் பாடி, cake வெட்டி celebrate பண்ணினோம்.. பெருசா பிரமாண்டமா எதுவும் செய்யனாலும், சின்ன எதிர்பார்ப்பு கூட இல்லாத அவளுக்கு இது மிகுந்த மகிழ்ச்சியை குடுத்தது. அது எனக்கு மிகவும் பிடித்தது.. இன்றும் அவள் காலையில் எழுந்தவுடன் அந்த மோதிரத்திற்கு முத்தமிட்டுத்தான் அவளின் நாளை தொடங்கிவைப்பாள். மிகவும் ராசியான தாம், அந்த மோதிரம். அடுத்த பிறந்தநாளுக்கு எதிர்பார்ப்பு கொஞ்சம் இருந்தது. ஆனால், நான் வேலை காரணமாக, வேற ஊருக்கு போக வேண்டி இருந்தது. வந்த பிறகு celebrate பண்ணலாம்னு சொல்லிட்டு கிளம்பி போயிருந்தேன். actually என் வேலை முன்னமே முடிஞ்சிடும். அவளுக்கு surprise குடுப்பதற்காக அப்படி சொல்லி இருந்தேன். என் friend family ய முன்தினம் வீட்டுக்கு வரசொல்லிருந்தேன். correct aa midnight க்கு நானும் வந்துட்டேன். எல்லாரும் சேர்ந்து celebrate பண்ணோம். என்னுடைய பரிசு அவளுக்கு மிகவும் பிடித்த வைரமுத்துவின் கவிதைகள் புத்தகம். எவ்வளவு முறை படித்தாலும், புதிதாக படிப்பதுபோல் அனுபவித்து படிப்பது மட்டும் இல்லாமல், எனக்கு ஒவ்வொருமுறையும் அதன் அழகினை அழகாக வர்ணிப்பாள். இரண்டு பிறந்தநாளுக்கும், அவளின் ஆனந்த கண்ணீரையே எனக்கு பரிசாக குடுத்தாள்.

இந்த முறை என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவளுக்கு மட்டும் என்ன, அவளின் பிறந்த நாள் வருவது கூட மறந்திருக்கும். 24 மணி நேரமும் உழசிற்றுக்கா. வீட்டுக்கு வேலைக்கு வரும் லக்ஷ்மி அக்காவை வரவேண்டாம் னு சொல்லிட்டா. எங்கள் சேமிப்பு குறையாமல் இருக்க, அவள் சின்ன வயசுல, கொஞ்சம் பழகின தையல் தொழிலை வைத்து, பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு, chudidhar, blowse, frock, பசங்களுக்கு pant, shirt முதலிவை குறைந்த கூலிக்கு தைத்து குடுத்து வீட்டு செலவுகளை சமாளிக்கிறாள். வீண் செலவு எதுவும் செய்யகூடாது என்பது எனக்கு விதித்த கட்டளை.

எனக்கும், எது வாங்கி கொடுக்கவும், மனசில்லை. கைல வேலை இல்லாம, இந்த பந்தா எல்லாம் தேவையான்னு, எனக்குள்ளேயே ஒரு குற்ற உணர்ச்சி. ஆனால், அவளின் ஆனந்த கண்ணீரை எப்படியாவுது வென்றுவிடவேண்டும் னு ரொம்ப ஆசையா இருந்தது. ஒரு நாள் கழிந்துவிட்டது. நான்கு கம்பெனி ஏறி இறங்கிருகேன். எல்லாருமே, அடுத்த வாரம் தெரிவிக்கிறோம் னு சொல்லிருகாங்க. நான்கு interview , ஒண்ணு மட்டும் தான் கொஞ்சம் திருப்தியா செஞ்சேன். அதுவும் முழு திருப்தி இல்ல. பாப்போம்.

இன்னிக்கி evening, beach க்காவுது போயிட்டு வரலாம் னு கூப்பிட்டேன். அவளும் "வாவ், நல்ல ஐடியா ங்க. jolly ஆ, குளு குளு காத்துல, தண்ணீல நல்ல நெனஞ்சிட்டு சுட சுட மொளக பஜ்ஜி சாப்ட்டுட்டு வரலாம். ரொம்ப நல்லா இருக்கும்... நாளைக்கு அந்த PSN and Co, interview, மூணு மணிக்குதானே,.. அதுவும் ஆதம்பாகத்துல... அத முடிச்சிட்டு நீங்க bus பிடிச்சிட்டு வீட்டுக்கு வரவே மணி ஏழு ஆய்டும். நாம இன்னிக்கே என் பிறந்த நாளை கொண்டாடிடலாங்க னு மிகுந்த ஆர்வத்தோடு சொன்னாள். மேலும், சிறிது குரலை குறைத்துக்கொண்டு, "வேற எதுவும் வேண்டாங்க. இன்னும் ஒரு வாரத்துல, வேலை கிடைச்சிடும், ஒரு மாசத்துல, சம்பளம் வந்த பிறகு, எனக்கு எதாவுது வாங்கி கொடுங்க.. சாதரண பொடவ எல்லாம் குடுத்த வாங்கிக்க மாட்டேன். பட்டு பொடவ வேணும், அதுவும் double side border la." என சிரிச்சுகிட்டே, "நான் போய் ready ஆய்ட்டு வரேன்" னு கெளம்பிட்ட.

பீச் ல நிறைய பேசினோம். இந்த மூன்று வருட வாழ்கையை அசை போட்டுகுட்டோம். அவளின் சின்ன வயசு பேச்சை தொடங்கிட்ட, நிறுத்தவே மாட்டாள். நூறாவுது முறையாக கூறும் விஷயமாக இருந்தாலும், "அப்படியா" னு ஆச்சரியப்படுவதைப் போல் செய்து அவள் பேசும் அழகினை ரசித்து கொண்டிருந்தேன். நேரம் போனதே தெரியல... கொஞ்சம் தண்ணி ல விளையாடிட்டு, கார சாரமா பஜ்ஜி சாப்டுட்டு வீட்டுக்கு வர மணி ஒன்பது ஆய்டுச்சு. அவள், தோசை வார்த்து குடுக்கும் போது தான், அவள் விரலில் மோதிரம் இல்லாததை பார்த்தேன். "ஏன் மா, ராசி இல்லன்னு அந்த மோதிரத்த கழட்டிடியா" னு கேட்டேன். தன் விரலை பார்த்து பதரியவளாய், தன் சேலையை நன்கு உதறினாள். "சாயந்தரம் காபி போடும் போது கூட கைல இருந்துதுங்க.. எங்க போயிருக்கும்?? " னு கண்ணில் கண்ணீர் எட்டி பார்க்க சமையலறையில் தன் கண்களை மேய விட்டாள். "பீச் ல விழுந்த்ருசோ!!" எட்டி பார்த்த கண்ணீர் பொல பொல என வழிந்துவிட்டது.

"இப்போ என்னங்க பண்றது? எனக்கு மிகவும் ராசியான மோதிரம். அது இல்லாம என்னால இருக்கவே முடியாது.. plz போய் தேடிப்பாருங்க.." என்று சொன்னாள். "என்ன விளையாடறியா, மணி இப்போ ஒன்பது. பட்ட பகல்லயே பீச் ல தொலஞ்ச ஒன்னு கிடைக்க வாய்ப்பில்ல, இந்த ராத்ரி நேரத்துல போய் தேடசொல்ற... சரி சரி, கவலைபடாத, நாளைக்கு மூணு மணிக்கு தான interview. நான் காலைல போய் தேடி பாக்றேன்.. " என்று வந்த கோவத்தை அடக்கி கொண்டு ஆறுதலாய் சொன்னேன். "வேண்டாங்க, நீங்க interview க்கு தயாராகுங்க.. நான் போய் பாக்றேன். அது கண்டிப்பா என் கைக்கு வரும் னு எனக்கு நம்பிக்கை இருக்குங்க. நாளைக்கு அது இல்லாம நான் வரமாட்டேன்" னு வீராவேசமாக சபதமிட்டாள். "already அதிர்ஷ்டம் இப்போ தான் நம்ம ஊரு local bus ஏறி நம்ம வீட்டுக்கு வர ticket எடுக்கலாமா வேண்டாமா னு யோச்சிற்றுக்கு... இதுல நீ luck னு நம்பர மோதிரம் வேற தொலஞ்சு போச்சா.. நாளைக்கு interview நா நல்ல செஞ்ச மாதிரி தான்.. " னு வ்ரக்தியோடு சொன்னேன்.. அவளுக்கு கஷ்டமாய் போய்விட்டது.. இரவு முழுக்க இருவருக்கும் தூக்கம் இல்லை.

பன்னிரன்டு மணிக்கு பிறந்த நாள் வாழ்த்தையும் கூறிவிட்டேன். எப்போ தூங்கினோம்னு தெரியல. எழுந்த்ருக்கச்சே மணி ஆறு.. அவள் இன்னும் அசதியில் தூங்கிகொண்டிருந்தாள். அரை மணி நேரத்தில் கிளம்பி, வர மதியம் ஆகும் னு எழுப்பி, சொல்லி அவள் கேள்விக்கு இடம் குடுக்காமல் கிளம்பிட்டேன். நான்கு மணி நேரத்தில் திரும்பி வந்தவன், மறுபடியும் அவளுக்கு பிறந்த நாள் வாழ்த்தை கூறிவிட்டு, எப்பொழுதோ வாங்கிய புதுச் சேலையை கட்டி இருந்த அழகைப் பாராட்டி விட்டு, interview க்கு தயாராகத் தொடங்கினேன். காலையிலிருந்து அவள் முகம் வாடியே இருந்தது. சாதரன நாட்கள்ல கூட அதிர்ஷடத்த நம்பாதவன், துன்பம் வரும்போது நம்ப ஆரம்சிடுவான். அவள் முன்னமே மிகுந்த நம்பிக்கை உடையவள். இப்போ கேட்கணுமா!!. "மோதிரம் கிடைத்ததா" னு கேட்க பல முறை வாய் திறந்தவள், என் பார்வைப் பட்டதும் மௌனமானாள்.

"அது எப்படி கிடைக்கும் னு நீ நம்பர, பீச் மணல்ல விழுந்துதோ, இல்லேன்னா, தண்ணி ல விழுந்துதோ, நானும் முடிஞ்ச வரைக்கும் பார்த்தேன்.. கிடைக்கல மா.. பரவாயில்லை, நீ அத மறந்துடு" னு சொன்னேன்... அழுதுகொண்டே அவள் சென்றுவிட்டாள். இருவரும் சாப்பிட்டோம். பாயசம் ஏனோ அன்று இருவருக்கும் இனிக்கவே இல்லை. அப்றோம், ரெண்டு பேரும் சும்மா பேசிற்றுந்தப்போ, "Very Happy Birthday" னு சொல்லி சிறிய gift wrapped பெட்டியைக் குடுத்தேன். அவள் மிகுந்த ஆர்வத்தோடு அதை பிரிக்க ஆரம்பித்தாள். "எதுவும் வேண்டாம், அப்படி இப்படி னு dialogue விட்ட, இப்போ இப்படி ஆசையா திறந்து பாக்குற!" னு சொன்னேன்... "என் lucky மோதிரம் மா, இருக்கணும் கடவுளே!" என்று வேண்டிக்கொண்டே அதை திறந்தாள். எப்படி தான் பீச் ல கிடைக்கும் னு நம்பினாளோ தெரியல... அவள், கைகளில் அந்த மோதிரம் இன்னுமே அழகாக ஜொலித்தது. என் பரிசு எனக்கு கிடைச்சிடுச்சு.. அவளின் ஆனந்த கண்ணீர். அதனை, கைகளில் தாங்கினேன்..

"Thank you soooo much.. எனக்காக பீச் முழுக்க தேடி கண்டுபிடிசிர்கீங்க... ஆசை இருந்துதே தவிர, மோதிரம் கிடைச்சிடும் னு நம்பிக்கை கொஞ்சம் கூட இல்லீங்க.. நீங்க நம்பிக்கை வெச்சி, போய், தேடி.. chanceee இல்ல.. கொண்டு வந்துடீங்க... இது தாங்க நீங்க இது வரை குடுத்ததுல, best gift..".. என்னால நம்பவே முடியல னு நூறு தடவ சொல்லிட்டா.. கண்களில் இன்னும் கண்ணீர் வந்துகொண்டு தான் இருந்தது... தொலைஞ்சி போனப்போ வந்த கண்ணீரை விட கிடைச்சப்றோம் வந்த கண்ணீர் தான் அதிகம்.. இதற்க்கு தானே நானும் ஆசைப்பட்டேன்..

அதனால் தான், முன்தினம் பீச் க்கு அழைத்து சென்று, அவளின் மோதிரத்தை, அவளுக்கே தெரியாமல் நான் எடுத்து விட்டேன். அவளின் அதிர்ச்த்டம் திரும்ப கிடைத்த மகிழ்ச்சியில் அவளும், அவளின் மகிழ்ச்சி, ஆனந்த கண்ணீர் கிடைத்த அதிர்ஷ்டம் என்னுடனும் இருக்க, இதுவே எனது இறுதி interview வாக இருக்கும் என ஒரு புது நம்பிக்கை மலர்ந்தது. அந்த நம்பிக்கையுடன் ஆதம்பாகத்திற்கு புறப்பட்டேன்.

Thursday, December 18, 2008

Forwards - New Definitions

This is one of the forwards I found interesting to share with u all...

CIGARETTE: A pinch of tobacco rolled in paper with fire at one end and a fool at the other!

MARRIAGE: It's an agreement wherein a man loses his bachelor degree and a woman gains her master

LECTURE: An art of transmitting Information from the notes of the lecturer to the notes of students without passing through the minds of either

CONFERENCE: The confusion of one man multiplied by the number present

COMPROMISE: The art of dividing a cake in such a way that everybody believes he got the biggest piece.

TEARS: The hydraulic force by which masculine will power is defeated by feminine water-power!

CONFERENCE ROOM: A place where everybody talks, nobody listens and everybody disagrees later on.

ECSTASY: A feeling when you feel you are going to feel a feeling you have never felt before.

CLASSIC: A book which people praise, but never read SMILE: A curve that can set a lot of things straight!

OFFICE: A place where you can relax after your strenuous home life.

YAWN: The only time when some married men ever get to open their mouth.

ETC: A sign to make others believe that you know more than you actually do.

COMMITTEE: Individuals who can do nothing individually and sit to decide that nothing can be done together.

PHILOSOPHER: A fool who torments himself during life, to be spoken of when dead.

DIPLOMAT: A person who tells you to go to hell in such a way that you actually look forward to the trip.

OPPORTUNIST: A person who starts taking bath if he accidentally falls into a river.

OPTIMIST: A person who while falling from EIFFEL TOWER says in midway "SEE I AM NOT INJURED YET!"

PESSIMIST: A person who says that O is the last letter in ZERO, Instead of the first letter in OPPORTUNITY.

MISER: A person who lives poor so that he can die RICH!

CRIMINAL: A guy no different from the other, unless he gets caught

ATOM BOMB: An invention to bring an end to all inventions.

BOSS: Someone who is early when you are late and late when you are early.

POLITICIAN: One who shakes your hand before elections and your Confidence Later.

DOCTOR: A person who kills your ills by pills, and kills you

Tuesday, December 9, 2008

KnowledgeDrain

Information Technology (IT) is one of the boons to India.. I am personally one of the benefitters and strongly feel it has risen the status of many middle class families across the country.

IT has lot of advantages to India, such as rise in economy, employment rate, quality of life.. to name a few.. There are few cons because of this necessary evil.. The prominent one is the rise in price of almost everything which is not affordable for the non-IT population... Though it hasnot denied the basic amenities to anyone, it has made the so-called sofisticated life - an unreachable fruit to many..

I could see one another drawback to this - Knowledge Drain.. Yeah, Loss of Knowledge...
nowadays, Engineering has become just a gateway to IT field, no matter which is your major. Few years back, if someone joins Civil engineering, for the four full years he will study the basics and concepts of Civil engineering... As rightly said, Nothing is complete when you are not practically working. what you read is mostly theory in your under graduation. He will join work in his respective technical field, say in this case, a Civil engineering job. He will first work as an assistant to a well experienced Boss. He will practically see the concepts working, the practical difficulties, and solutions to overcome them... Thus in few years, he will be well equiped to design his own plan.. His core expertise helps him in fixing everything related to civil not only at his office, but also at his home, surroundings...

A Complete Engineer is one who knows the basics of all Engineering subjects.. That is the reason, we are asked to learn the basics of all engineering subjects in the first year of an Engineering curriculum. Even at work, different departments got to work/interfact on each other and appreciate their work for executing their task...An electrical engineer will have to interact with mechanical engineer and vise-versa and its the same for any other engineer.. Thus when you are at a technical industry, u become a complete engineer, thanks to the various technical industries which keeps multiple brains employed.


This practical knowledge helps that person to innovate, fix, remodel anything if he has any need at home.. He can build his own burglar-alarm system, clocks, and tiny tiny day to day needs..
My father is an electical engineer. When we were kids, he used to fix any kind of small problems at home - not limited to Electrical Engineering alone but related to almost anything that we see/use in our day to day life... I used to be surprised at his skills... He is a complete engineer and this knowledge comes out of his experience.

But these days, whatever we Engineers study as a major, most of us are into IT. The subjects we read during the entire 4 year Engineering carrer, the knowledge our professors transferred to us, all of them just go away as we dont use them at work or in day to day life.. Is this not Knowledge drain??

It is not just enough that an Engineer be an expert in everything related to computers. Writing complex software/Assembling a computer is not all in this world.World is not just computers. There are many other things in this world that a common should know. Not just rely on others even to fix the very basic/minor problems at home/elsewhere.

An ideal Engineer is one who puts into work, what all he has learnt and this will lead to innovations in technical industries which will also help in booming our Economy. Today from soaps, pastes, cool drinks, to TV, bikes, cars, we import from foreign countries and it is a prestige to have them.. We have to change this situation atleast in fear of losing the knowledge. For the future generations we have to give them more than what we actually learnt. If this situation continues, we would end up giving them very less, which would one day be of no use.

Non-IT industries has to do something to attract the brains.When young engineers get to work in technical/non-IT industries, it will lead to lot more innovations/inventions as they had their basics trained in their Engineering. He can explore and experiment everything. In future, mabe far future, this would ultimately lead to new inventions, better products, and more friendly utilities.

We should stop exporting brains and start exporting the products of these brains, so that still its we, the India who owns the brains...

Thursday, November 20, 2008

வாழ்க வளமுடன்

என் பேர் தீபா. அனுவும் நானும் ஒரே பள்ளியில் படித்து வந்தோம். அனு மிக நன்றாக படிக்கும் பெண். வகுப்பில் எப்பொழுதுமே முதல் மதிப்பெண் வாங்குபவள். நா ஒண்ணும் கொர்ரச்சல் இல்லீங்க.. இரண்டவுது மூன்றாவுது அதிகபட்சமா ஐந்தாவதுகுள்ள வந்துடுவேன். ஆனாலும் ஒத்துக்கவேண்டிய விஷயம், அவளின் புத்திசாலித்தனம், IQ , தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துக்கு முன்னாடி, நானெல்லாம் ஒண்ணுமில்லீங்க...


இப்போ நாங்க வாழ்கையின் முக்கியமான கட்டத்தில் இருக்கோம். பிள்ளைகளை விட பெற்றவர்கள் அதிகம் tension ஆகும் வருடம். பெற்றவர்களுக்கு அதிகம் home work இருக்கும் வருடம். பனிரெண்டாம் வகுப்பு. எப்படாப்பா பரீட்சை வரும், ஒன்றரை வருஷமா படிச்சத எல்லாம் பரீட்சை பேப்பர்ல கொட்டிட்டு வந்திடலாம் னு நாங்கெல்லாம் காத்திருந்தோம்.


ஒரு வழியா முப்பது நாட்கள்ல எல்லாம் பேப்பர் உம் முடிஞ்சிது. சரி, ஒரு தலை வலி முடிஞ்சிது னு பெருமூச்சு விட்ரதுகுள்ள, அடுத்து இடி போல வர போற நுழைவுத் தேர்வுக்கு படிக்கணும். ஒரு நாள் கொஞ்சம் relax பணிகலாம்னு, marina beach போகலாம்னு நாங்க friends கொஞ்சம் பேரு decide பண்ணினோம்.


அன்று தான் அந்த கொடூர சம்பவம் நடந்தது... எங்கள் bus உம் எதிரே வந்த bus உம் நேருக்கு நேர் மோதிக்கொள்ளவிருக்கும் தருவாயில், அதிர்ச்சியில் அனைவரும் திக்குமுக்காடினோம்... நான் நினைவிழந்து விட்டேன். கண் விழித்து பார்க்கும் பொழுது, என் தாயாரின் அழுகை கேட்க, என் தந்தையின் சோர்ந்த முகம் தெரிய, என் அண்ணனின் கை என் கைகளை பிடிக்க, அம்மா என்று நான் அலற, என் அத்தனை புலன்களும் வேலை செய்வதை உணர்ந்து அவ்வளவு துக்கத்திலும் ஒரு புன்னகை வர தான் செய்தது..


என் கைகளிலும், முகத்திலும், நிறைய கண்ணாடி துண்டுகளின் காயம், இடது காலில் fracture , அகங்கே நிறைய இடங்களில் stitches என்று அம்மா அழுதுகொண்டே கூறினாள். சரி hospital லில் இருந்தே நுழைவுத் தேர்வுக்கு படிக்க வேண்டியது தான் என்று நினைத்துகொண்டேன்... சரி, அனு, மீனா, பவித்ரா, வேணி எல்லாரும் எப்படி இருகாங்க??? எல்லாருக்கும் உன்ன மாதிரி கொஞ்சம் கொஞ்சம் காயம்.. ஆனா, நம்ம அனுவுக்கு தான்.. என்று இழுத்தாள் அம்மா...
"என்னம்மா ஆச்சு?? சீக்கரம் சொல்லு?? எனக்கு பயமா இருக்கு" என பதறினேன்... என் வாழ்க்கையில் நான் மிகவும் துடிதுடித்த தருணம் அது. "அவளின் வலது காலை cut பண்ணி எடுத்து, artificial leg பொறுத்த போறாங்களாம் " என்று மெதுவாய் சொன்னாள்.

"என்ன கொடுமை இது??, இறைவன் மீது எனக்கு மிகுந்த கோபம் வந்தது... ஒன்றுமே புரியாதது போல் இருந்தது. இதெல்லாம் ஒரு கனவாக இருக்க கூடாதா! நாளைக்கு மறுபடியும் எங்களின் இறுதி பரீட்சை இருக்க கூடாதா!" என்று என் மனம் மிகவும் விரும்பியது... என்னால் அனுவை எதிர் கொள்ளவே முடியவில்லை. ஒரு வாரம் இப்படியே போனது... அனு வீட்டுக்கு வர, இன்னும் இரண்டு வாரம் ஆகும் என்று அவளின் தாயார் சொன்னார். இது நாள் வரையில், அவளின் தாயாரிடம் மட்டும் தினமும், அனு எப்படி இருக்கிறாள் என்று கேட்டு கொள்வேன். தினமும் அழுதுகிட்டே இருக்கிறாள் என்றும், ரொம்ப பயமா இருக்கு எதாவுது செய்துகுவாளோ என்றும் கவலை பட்டார்.. மனம் சிறிதும் புத்தகத்தின் பக்கம் வரவில்லை. அன்று அனுவை பார்க்க தைரியத்தை வரவழைத்து கொண்டு அவளின் அறைக்குச் சென்றேன். அழுது அழுது கண்கள் இரண்டும் வீங்கி இருந்தது... எனக்கு அடுத்த நொடி அழுகை வந்து விட்டது..


"நானும் இப்படி தான் அழுதுற்றுந்தேன் 1 week ஆ. இனிக்கி morning தான் "இனி அழக்கூடாது னு decide பணிருக்கேன்" என்று அழுதுகொண்டே சொன்னாள். "நமக்கு ரொம்ப பிடிச்சவங்க ள நாம எழந்துட்ட, அந்த துக்கத்த நம்மால தாங்கவே முடியாது.. ஆனா, நாம அத மறந்து நம்ம வாழ்கையை தொடரத்தான் வேணும்.. அதுபோல், எனக்கு உறுதுணையா இருந்த என் காலின் இழப்பை, நான் ஏத்துக்கொண்டு, என் வாழ்கையை தொடரத்தான் வேண்டும்.. வேற வழியே இல்லன்னு இருக்ரப்போ, அத நெனச்சு வருத்தபட்ரதால எந்த பயனும் இல்ல. இனி என்னுடைய artificial leg நான் நடக்க உறுதுணைய இருக்கும். இத சொல்றது ரொம்ப சுலபம்.. வாழறது கஷ்டம்.. பாப்போம்.. சரி, நான் என் அப்பா கிட்ட physics book எடுத்துட்டு வர சொல்லி இருக்கேன்.. இன்னும் 3 weeks தான் இருக்கு... படிக்க ஆரம்பிக்கணும்.. நீ எந்த chapter படிக்க ஆரம்சிருக்க? " என்று அழகாக பேச்சை மாற்றினாள்... நானும், அன்று படிப்பைப் பற்றிய பேச்சை தொடர்ந்துவிட்டேன்..

இவ்ளோ நடந்திருந்தும், தேர்வில் அவள் தன் முதல் மதிப்பெண். என்னால் அந்த ஒரு மாதம் ஒன்றுமே படிக்க முடியல... வெளியூரில் நல்ல கல்லூரியில் இடம் கிடைத்தாலும், அனுவின் பெற்றோர்கள் கட்டாயப்படுத்தி அவளை எங்க ஊரு கல்லூரியிலேயே சேர்த்தார்கள். என் entrance marks கொஞ்சம் கொரஞ்சதால, நானும் எங்க ஊரு காலேஜ் ல தான் சேர்ந்தேன்... அனு என்னை பலமுறை பிரமிக்கவைதிருக்கிறாள். ஆனால் , எனக்குள் ஒன்று, அவளின் மகிழ்ச்சிக்காக என்றும் இறைவனிடம் பிரார்த்தனை செய்துக்கொண்டிருந்தது..

ஒரு முறை, PT hour ல, எல்லாரும் Volley Ball விளையாடிற்றுந்தாங்க.. அனு ஒரு மரத்தடியில் அமர்ந்து பாத்துகிற்றுந்தா.. நா கொஞ்சம் லேட் ஆ வந்தேன்.. "சரி, வா அனு, நாம அந்த பக்கம் போகலாம்" னு அவளை திசை திருப்ப பார்த்தேன்.. "ஏன், எனக்கு கஷ்டமா இருக்கும் னு நினைகிரியா? கண்டிப்பா இல்ல.. என் கால்கள் நல்ல இருந்த்ருந்தா கூட நான் ரொம்ப நேரம் இதெல்லாம் விளையாடிருக்க மாட்டேன். இப்படி வேடிக்கை தான் பாத்துகிற்றுந்த்ருபேன். இப்போ மட்டும் ஏன் எல்லோரும் என்ன பாவமா பாக்றீங்க?... அபடியே எனக்கு எதாவுது விளையாடனும் னு தோநிசுன்ன, நா Chess இல்ல carrom விளையாடறேன்.. நீ ரொம்ப feel பண்ணாத னு" சிரிச்சுகிட்டே சொன்ன.."ஒரு வேளை நான் dancer ஆ இருந்து, என் கால்களை இழந்திருந்தால், mabe அப்போ ரொம்ப கஷ்டபற்றுப்பென இருக்கும்..." என்றும் சொன்னாள். ஆனா, அவள் கண்டிப்பா அப்பவும் feel பண்ணிருக்க மாட்டாள். "இவ்ளோ நாள், என் கால்கள் இருந்துது.. dance ஆடினேன்.. இப்போ வேற எதாவுது கத்துக்ரேனே!" என்று சொல்லி இருப்பாள்.


எங்கள் படிப்பு முடிந்ததும், இருவரும் வேலைக்குச் சேர்ந்தோம்.. படிப்பிலும் சரி, வேலைக்கு தேடும்போதும் சரி, எந்த வித quota வும் பயன் படுத்த கூடாது என்பது அவளின் முடிவு... எவ்வளவு தான் அவள் அவளின் ஊனத்தை மறக்க முயன்றாலும், இந்த ஊர் அவளை பாவம், பரிதாபம் போன்ற உணர்ச்சிகளால் ஞாபகம் படுத்திக்கொண்டே இருந்தது,... இது என்னை உறுத்திக்கொண்டே இருந்தது... எப்படியாவுது அவளுக்கு வெகு தொலைவான ஒரு தனி உலகத்துக்கு transfer ஆகணனும் னு நா வேண்டிகாத கடவுள் இல்ல.. அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது.. ஒரு consultant மூலமாக America வில் வேலை செய்ய விசா ஏற்பாடு செய்யும் நபரின் அறிமுகம் கிடைத்தது... அனு வை எப்படியாவது சமாளித்து apply பண்ண வைத்தேன்,... கண்டிப்பா கெடச்சிடும்.. இந்த மாற்றம் அவளுக்கு சுதந்திரத்தையும், மன சாந்தியையும் தரும்..


என்னடா நான், அனுவைப் பத்தி இவ்ளோ கவலை படறேன்னு பாக்ரீங்கள.. இது அவளிடம் எனக்கு இருந்த நட்புக்காக மட்டும் இல்ல... infact, அந்த நாளிலிருந்து தான், எங்கள் நட்பு வலுவானது. இது ஒரு குற்ற உணர்ச்சியினால் தான்... அன்னிக்கி நானும் மீனாவும் beach கு போக plan செஞ்சப்போ, அனு கண்டிப்பா வர மாட்டேன்னு சொன்ன... "ஒரு நாள் தான, எங்களோட வந்தா, ஒன்னும் கொரஞ்சிடாது, உனக்கு ஒண்ணும் ஆகாம, பத்ரமா வந்து சேதுடறேன்னு வலு கட்டாயப்படுத்தி அவள கூட்டிட்டு போனேன்... நாங்க எல்லாம் டைம் வேஸ்ட் பண்ணும் போது, அவ மட்டும் படிசிடகூடாதுங்க்ற பொறாமைல தான் force பண்ணேன்.. அப்படி நான் செய்யாமல் இருந்திருந்தால், இப்படியெல்லாம் நடக்காமல் இருந்த்ருக்கும்.. இப்படி அவளுக்கு ஆனதுக்கு ஒரு வகையில நானும் காரணம்ங்கற குற்ற உணர்ச்சி... அதற்க்கு மேல், இதுவரை, அப்படி ஒரு முறை கூட அவள் சொல்லிக் காட்டியதில்லை... அதுவே என் மனப் போராட்டத்தை இன்னும் அதிகரித்தது...

என்னுடைய அந்த சின்ன புத்தியின் விளைவாய், நேரடியாக அந்த நிகழ்வுக்கு நான் காரணம் இல்லை என்றாலும், ஒவ்வொரு முறை அவளை பார்க்கும் போதும், முள் மீது நடப்பது போல் துடி துடித்து போகிறேன்.. அவள் எப்பொழுதும் நிதானமாகத்தான் இருக்கிறாள். "கெட்டாலும் மேண் மக்கள் மேண் மக்களே" அதுதான் அனு. அவளை நன்கு புரிந்துகொண்டவரும், அவளுக்கு மிகவும் பிடித்தவருமான ஒருவர் அவளை மணம் புரிய மனமார வாழ்த்துகிறேன்.

Monday, November 3, 2008

அவள் அப்படித்தான்

ஒரு நிறுவனத்தில் கணிபொறி பிரிவில் பணியாற்றி வந்தனர் மூவர் . வித்யா, சீதா, மற்றும் அர்ச்சனா. இதில் அர்ச்சனா, மிக அமைதியான பெண். மற்ற இருவரும் நன்கு அரட்டை அடிக்கும் ஆசாமிகள். இவர்கள் இங்கு சேர்ந்த பிறகே அறிமுகமானவர்கள். இவர்களின் வேலை நேரம் காலை எட்டு மணியிலிருந்து மாலை ஐந்து வரை .

வித்யா மற்றும் சீதா கல்லூரி விடுதியிலிருந்து படித்தவர்கள். மிக சகஜமாக அனைவரிடமும் பழகுவார்கள். அர்ச்சனா, வீட்டு கோழி. என்றுமே பெற்றோரின் நிழலிலேயே பொத்தி பொத்தி வளர்ந்தவள். தினமும் தன் வேலையை முடித்து அரசு அலுவலகம் போல், சரியாக, ஐந்து மணி ஆனவுடன் கிளம்பிவிடுவாள். ஆனால், மற்ற இருவரும் , மணிக்கு ஒரு முறை Tea-break , ஒரு மணி நேரம் Lunch-Break என்று கல்லூரி போல் ஜாலியாக பணி புரிய விரும்புவார்கள்.

இவர்கள் இருவரும் மெயில் செக் செய்வது, blogs படிப்பது, chat செய்வது, செய்தி தாள் வாசிப்பது, games விளையாடுவது என்று ஒரு கணினி கொண்டு என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அவ்வளவும் செய்வர். பின்பு அதை பற்றி break களில் discussions . எட்டு மணிக்கு கம்மியா இருவரும் அலுவலகத்தை விட்டு கிளம்பினதா, சரித்திரமே இல்ல. இவர்களின் வேலையில் எந்த வித குறையும் இல்லாததால், மேனேஜர் இடம் இவர்கள் மூவருக்கும் நல்ல பெயர் தான்.

வேலை பொழுது போக்கு போல் செய்தால், சுகமாக இருக்கும் என்று எப்பொழுதும் அர்ச்சனா வை சீண்டுவார். அந்த வாதத்தை வளர்த்தால், எங்கு நேரம் போய்விடுமோ என்று அஞ்சி அவள் வாக்கு வாதத்தை வளர்க்க விரும்பவில்லை.

வித்யா மற்றும் சீதா browse செய்யும் technical sites வேறுபட்டிருந்தாலும்,
இவர்கள் இருவரின் favourite blog "பெண்ணுக்குள் ஓர் உலகம்". மது என்பவளால் எழுதப்படுவது.

"வீடு, வேலை, சாப்பாடு, தூக்கம், தொலைக்காட்சி னு இல்லாம, எதாவுது hobby இருக்கவேண்டாமா, then only you will know about many things. " என்று, இவர்கள் இருவரும் அர்ச்சனா விற்கு நிறைய முறை advice செய்திருக்கிறார்கள். "மதுவின் blog யவுது படி... நல்ல கதைகள், கவிதைகள், னு அசத்தலா எழுதி இருக்கா. எவ்ளோ followers தெரியுமா அவளோட blog க்கு?. அவ்ளோ நல்ல இருக்குன்னு அர்த்தம். சும்மா ஒரு முறை படிச்சு பாரு.. பிடிகலன்ன, free விட்டுடு... அது தவிர, இன்னும் எவ்ளவோ பண்ண முடியும் free time ல. சரியான நேரத்துல வீட்டுக்கு போய், அம்மா கு சமையல் ல உதவி செஞ்சு, தம்பி க்கு படிப்பு சொல்லிகுடுக்றது மட்டும் இல்ல வாழ்கை. நீயா நெறைய கத்துக்கணும் எங்கள போல!" னு ஒரு நாள் பயங்கர advice. என்ன சொல்லி என்ன, எப்பவுமே அர்ச்சனா வின் பதில் ஒரு புன்னகை மட்டும் தான்.

அன்று, வீட்டுக்கு வந்தவுடன், வித்யா, சீதா சொன்னது ஞாபகத்திற்கு வந்தவளாய், முதல் வேலையாக மதுவின் blog இற்கு சென்றாள். archana.ramkumar@gmail.com user ID வைத்து login செய்தாள். நம்ம அர்ச்சனா தான், மது என்ற புனை பெயரில், "பெண்ணுக்குள் ஓர் உலகம்" என்கிற வலைபதிப்பை எழுதுபவள்.

அர்ச்சனா வின் தாயார், "என்னம்மா, இன்னிக்கு வந்தவுடன், கம்ப்யூட்டர் முன்னாடி??" அர்ச்சனா அதற்க்கு "திவ்யா வும் சீதாவும் இன்னிக்கி வாழ்க்கையில் எதாவுது செய்யணும் னு ரொம்ப அட்வைஸ் பண்ணினாங்க. அதை வெச்சி ஒரு கதை தோணித்து. அது தான் உடனே எழுதிடலாம்னு வந்தேன்."

தாயார்: "நீ தான் அந்த blog எழுதறேன்னு சொல்லலாம்ல அவங்க கிட்ட?"

அர்ச்சனா : "வேண்டாம் மா. அப்றோம் அவங்க கேள்விகள், discussions எல்லாத்துல நானும் பங்கேற்க வேண்டி இருக்கும். அப்றோம் எழுதறது கொறஞ்சி அதை பத்திய பேச்சு அதிகமாகிவிடும். அது மட்டும் இல்லாமல், இப்படி எழுதினால், அவங்க நம்ள பத்தி என்ன நினைப்பாங்களோ, அப்படி எழுதினால், நானும் அப்படி தான்னு நினைபான்களோ, அப்படி பட்ட எண்ணங்கள் என் எழுத்து சுதந்திரத்தையே பரிச்சிடும். I have to write for others, if it is my profession. But writing is my hobby and I want to write it for me. நா எழுதறேன்னு சொல்லாமலே, விமர்சனங்கள் கேடசிடுது. இது போதுமே எனக்கு. அதுக்கு தான், என் நெருங்கிய நண்பர்களிடம், நான் படிச்சது னு சொல்லி என் blog post a நானே forward பண்ணினேன். இப்போ அதைபத்தி என் கூட வேலை செய்றவங்க எனக்கே சொல்றாங்க.

தாயார்: எல்லாத்துக்கும் எதாவுது பதில் வெச்சிருபியே!.

என்று தன் வேலையை கவனிக்க சென்றுவிட்டாள்.

Wednesday, October 15, 2008

Richness

Richness doesnot depend on what u earn, but on how u spend.

Sunday, October 12, 2008

கடவுளே இது என்ன சோதனை!

என் பெயர் பாலு. நான் இந்த ஊருக்கு வரும்பொழுதே  அழுதுட்டு தாங்க வந்தேன். ஏனென்றால்  எனக்கு இங்க யாரையும் முன்ன பின்ன தெரியாது. சித்ரா வை போய் பாரு , வேலை குடுப்பாங்கன்னு சொல்லி அனுப்சுவிட்டுடாங்க. அவங்கள நான் பார்த்தது கூட கிடையாது. அவங்களை பார்த்தேன். நல்லவங்களா  தான் தெரிஞ்சாங்க. ஆனா யாரையும் நம்ப முடியாதுலீங்களா... கொஞ்சம் அளவா தான் பழகினேன்.. கொஞ்சம் பயமா இருந்தது. அவங்க வீட்ல நான் யார்கிட்டயும் அதிகம் பேச கூட மாட்டேன். என்ன அவங்க வீட்லயே ஒரு தனி ரூம் ல தங்க சொல்லிடாங்க..



சித்ரா ங்கறவங்க பெரிய வேலைல இருகிறதா சொன்னாங்க.. ஆனா, எப்பவும் வீட்ல தான் இருக்காங்க.. இவங்க எனக்கு என்ன வேலைபோட்டு  குடுக்க போறாங்களோன்னு சந்தேகமாத்தான் இருக்கு...




என்ன குடும்பம் யா அது?. என்ன யாரும் என் பேர் வெச்சி கூட  கூப்பிடறது இல்ல. வாய்க்கு வந்தத கூப்பிடறாங்க... எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல.. அவங்க வீட்ல நாலு பேரு தான் இருக்காங்க.. ஒரு நாள் கூட, அவங்க சாப்பிடும்போது என்ன கூப்பிட்டதில்ல. தனியா தான் எனக்கு என்னிக்குமே சாப்பாடு.என்ன செய்றது, இவங்க எல்லாம் அப்படி தான்னு விட்டுட்டேன்..
எப்பவுமே எனக்கு தெரியாம, யாரவுது என்ன கவனிச்சிட்டு இருக்காங்க.. ஒரு வேளை இவன் ஒழுங்கா  வேலை செய்வானான்னு அவங்களுக்கு சந்தேகமாயிருக்கும்னு நினைக்கிறேன்.





இப்படியே, எனக்கு என்ன வேலை , அவங்க என்ன வேலை செய்றாங்க, இதெல்லாம் மர்மமாகவே இருந்தது. திடீர்னு ஒரு நாள், வெளியில போயிருந்தப்போ, என்ன ஒருத்தன், பயங்கரமா கத்தி போல எதையோ வெச்சி குத்த வந்தான். நானும் அவன எதிர்த்து பார்த்தேன். முடியல. இவங்க எல்லாம் எனக்கு உதவி கூட பண்ணாம, எதையும் பார்க்காதவங்க மாதிரி இருகாங்க. நல்ல வேளை, பெருசா எதும் இல்ல, சின்ன காயம் தான். என் திறமையை சோதிக்க இவங்களே அனுப்ச்ச ஆளா இருக்கும்னு நினைக்கிறேன்... ஐயோ, தோற்று போய்டோமே, வேலை குடுக்காம போயிடுவாங்களோ!...





மறுநாள், பாலு  "கடவுளே, என்ன ஏன் இந்த கொடுமைகாரங்க கிட்ட அனுப்ச்ச!..." என்று புலம்பிய போது, "பாலு , நீ பொறந்து ஒரு வாரம் தான் ஆகுது. உன் தாயார் சித்ரா, உன்ன நல்லா  பார்த்துப்பாங்க.. அவங்க எது செஞ்சாலும் உன் நல்லதுக்கு தான். நீ வளர வளர அது உனக்கே புரியும். இப்போ நிம்மதியா தூங்கு" என்று இறைவன் பதில் சொன்னார். அதை கேட்ட பாலுவின்  முகத்தில் ஒரு சிறு புன்னகை.
"ஹே, சீக்கரம் இங்க வந்து பாருங்களேன்.. முதல் முறையா சிரிக்கிறான். நல்லா  இருக்குல்ல!... நேத்து போட்ட தடுப்பூசினால , ரொம்ப அழுவானோன்னு நெனச்சேன்.. நல்ல வேளை normal ஆ தான் இருக்கான்.. " என்று சித்ரா அவளின் அம்மா, அப்பா, கணவரிடம் கூறினாள்.